^பேசும் கவிதைகள்^

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் அறிவிக்கப் படும் ^படம் பார்த்து கவிதை சொல்லும்^ போட்டியில் கிடைக்கும் அழகான கவிதைகளின் தொகுப்பு.



Raju

காதல் சண்டே

உன்னிடம் சண்டைபோடும் நாளா சண்டே?
காதல் மொழி பேசும் நாளா சண்டே?

இன்டர்நெட், சாட் என்று கும்மி அடித்தோம்
ஹோட்டல், பப் என்று சுற்றினோம்

மல்டிப்ளெக்ஸ் அனைத்தும் பார்த்துவிட்டோம்
மால்கள் அனைத்தும் அளந்துவிட்டோம்

அடல்ட்ஸ் என்ன குழந்தை என மொழி பேசி
காதல நினைவுகள் பருகினோம்

வேலை காரணம் நாம் பிரிந்தாலும்
ஊர் மாறினாலும் மறக்கமாட்டேன் என்றாய்

இருந்தாலும் என்னை மறந்துவிட்டாயா தோழி
சண்டே எனக்கு பிறந்த நாள்!

--

SUREஷ்

சண்டேன்னா

இப்படித்தான்..,

சிவப்பு மெத்தையில்...

--

இய‌ற்கை

ஹை....நாளைக்கு ச‌ண்டே ஜாலிடே..
என்ஜாய் என‌ச் சொல்லும்
மேட்டிக்குடி ம‌க‌ன் உன‌க்குத் தெரியுமா
என் ச‌ண்டேக்க‌ளின் முக்கிய‌த்துவ‌ம்
ப‌சி போக்கும்,
ஒரு வேளை ச‌த்துண‌வும் கிடைக்ககாத‌ நாள்
யூனிபார்ம் ஆடையின் கிழிச‌ல்க‌ளுக்கு
ஒட்டுப் போடும் நாள்
அடுத்த‌ மாத‌ப் ப‌ரிட்சைக்குள் பேனா வாங்க‌,
ச‌ம்பாதிக்கும் நாள்..

--

sakthi

ஞாயிறுகளில் ஆரம்பிக்கப்படும்
நட்பு எனும் பெயரில்
திங்களில் திரிந்து
செவ்வாயில் கனிந்து
புதனன்று காதல் சொல்லப்பட்டு
வியாழனன்று மோகம் வென்றுவிட‌
வெள்ளியன்று ஊடல் கொண்டு
சனியோடு தொலைந்து போகின்றது

இப்பொழுது
காதல் எனும்
பெயரில் உதிக்கும்
இனக்கவர்ச்சி
இளையவர்களிடம்

--

திகழ்மிளிர்

கதம்ப மாலை ஆகிறது
ஞாயிறு காலை
கணவன்
தாரம்
மற்றும்
பசங்கள் சேர்ந்தயுடன்.

.........................

உண்ணும்
உறங்கும்
விடுதிகளாய் இல்லங்கள்
வார நாட்களில் ...................
ஞாயிறு வந்துவிட்டால்
வீடுகளில் எல்லாம்
விழாக்கோலம்
குடும்பத்தின
குதூகலத்தில்.......................

--

சுழியன்

இன்று உனக்காக நானடி!"
-----------------------------

நெற்றியில் முத்தமிட்டு, சூடான காஃபி...

ஆர்டின் வடிவத்தில் சுட்டுக் கொடுத்த தோசை...

இருவரும் சேர்ந்து துவைத்த சேலை...

கேட்டுக் கேட்டு, ஆர்வமாய் செய்த‌ அரைகுறை சமையல்...

தோளில் சாய்ந்து ரசித்துப் பார்த்த‌ ஐஸ்க்ரீம் சினிமா...

...............

எல்லா ஞாயிறும் தவறாமல், எப்படித்தான் ,

மேன்ஷன் அறைக்குள் நுழைகிறதோ

தடை செய்யப்பட்ட இந்த கனவு மட்டும்

--

அமுதா

சிலிர்க்கின்றது இதயம்
காதல் பூக்கள் மின்ன
ஞாயிறு உதயம்..

3 comments:

மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்ய்!


:)

இயற்கையின் வரிகளில் மனம் கனத்து போனது :(

Thanks Ayilyan:-)