tag:blogger.com,1999:blog-83305195075925602302024-02-19T14:49:25.742+05:30^பேசும் கவிதைகள்^ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் அறிவிக்கப் படும் <a href="http://podian.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> ^படம் பார்த்து கவிதை சொல்லும்^ </a> போட்டியில் கிடைக்கும் அழகான கவிதைகளின் தொகுப்பு.Sanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8330519507592560230.post-87663147951849805032009-06-04T08:55:00.001+05:302009-06-04T08:55:02.351+05:30படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 4<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA7SRCgEC5AaRZf9Bx-wlbJbRygW1D5jwQm05rMcnmy0BspLoPfbT-f2eljPi9T-tPx0m6a6IowzSz7BTx5v5rNPviCVb_6YS5lRR90wWyDfs6N28vbExAmxTekoVKBPvm8cXKeCCIux0/s1600-h/4.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 251px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA7SRCgEC5AaRZf9Bx-wlbJbRygW1D5jwQm05rMcnmy0BspLoPfbT-f2eljPi9T-tPx0m6a6IowzSz7BTx5v5rNPviCVb_6YS5lRR90wWyDfs6N28vbExAmxTekoVKBPvm8cXKeCCIux0/s320/4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5342968410327827682" border="0" /></a><br /><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/02510985865918613476" rel="nofollow" onclick="">sakthi</a></span><p>இனணயற்ற ஒவியன் பிரம்மன்<br />எந்த தூரிகை கொண்டு உன்னை<br />வரைந்தனன் உன் வண்ணம் என்ன<br />வானவில்லில் கடைந்ததோ<br /><br />நற்றமிழும் அற்றமிழும்<br />நாணம் கொள்ளும்<br />நின் அற்புத வதனத்தின்<br />அழகை பகர இயலாது<br /><br />ஒவியங்கள் அசைவதில்லை<br />நீ மட்டும் அசைந்தாடும்<br />உயிரோவியமாய்!!!!</p>--<br /><br /><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/09746136247218188169" rel="nofollow" onclick="">அன்புடன் அருணா</a></span><br /><br />மேகத்தையும்<br />காற்றையும்<br />முந்திச் சென்றாய்!!!<br />நீ!<br />வேகத்தில் அல்ல....<br />அழகில்!!!!<br /><br />--<br /><br /><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/12274631919631514508" rel="nofollow" onclick="">முத்துகுமரன்</a></span><br /><p>நிறங்களாய்<br />கடலும் வானும் உறைந்திருக்க<br />ஈரமண்ணில் தடம் பதித்து<br />சிறகடித்து சிரிக்கின்றன<br />பிஞ்சுக் கால்கள்<br />ஓவியத்திற்கு<br />உயிர் தெளித்து!!</p>--<br /><br /><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/07684164103999809931" rel="nofollow" onclick="">செயபால்</a></span> said...<p>ஓடி வரும்<br />ஓவியமே<br />துரத்துவது<br />யாருன்னை<br /><br />ஓயாத நீரும்<br />ஒய்யார வானும்<br />ஓட ஓடத்<br />துரத்திடுதோ<br /><br />ஒப்பில்லா<br />அழகுக்கு<br />போட்டி நீ<br />என்றெண்ணி</p><p>--</p><p> <span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/05033197088121557136" rel="nofollow" onclick="">Raju</a></span><br /></p><p>எனக்கென்று நீ பிறந்தாய்<br />அலைகடலென ஆர்பரித்தாய்<br />கண்ணே குதுகளித்தாய்<br />என் வாழ்வில் வசந்தம் மலரச்செய்தாய்</p><p>--</p><p><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/07421941142189934213" rel="nofollow" onclick="">பொடிப்பையன்</a></span><br /></p><p>மகிழ்வாய் பறக்கிறது ஒரு பஞ்சவர்ணம்<br />தன் வர்ணமான எதிர்காலத்தை நோக்கி...</p><p>--</p><p><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/16840291519301761291" rel="nofollow" onclick="">வெங்கிராஜா</a></span><br /></p><p>யாழினிது குழலினிது.<br />மேலும் கீழும்<br />நீலநிறப் பொறிகள்<br />ஊன்றிய காலடியின்<br />அடியில் பற்றிய மணல்<br />மோனவெளியில் மாயமாக ;<br />ஓட ஓடத் துரத்தும்<br />அலையின் நாக்குகளுக்கு<br />இரையாகும் சுவடுகள் ;<br />எது குறித்தும் கவலையற்று<br />என்னை முந்தியோடும்<br />பிஞ்சின் கொலுசொலிகள்.</p><p>---</p><p><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/02243460129651376588" rel="nofollow" onclick="">தமிழ்ப்பிரியா</a></span> said...</p><p>தன்னழகு கொண்டு<br />இருமாந்திருந்த,<br />கடலும், மேகமும்<br />வெட்கித்தான் போகின்றன<br />அவளழகு கண்டு.....<br />அவைகளுக்கு தெரியாது...<br />நேற்று வரை அவள்,<br />குழந்தை தொழிலாளியாய்<br />கட்டுண்டு கிடந்தாள் என்று...<br />அவள் பள்ளிக்கனவு<br />பலித்த்தற்கான ஆரவாரத்துடன்,<br />ஓடுகிறாள் இன்பமான<br />எதிர்காலம் நோக்கி......</p><p>--</p><p><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/04870728698510719473" rel="nofollow" onclick="">$anjaiGandh!</a></span><br /></p><p>புத்தக பொதி மறக்கும்<br />அத்துனை நேரங்களும்<br />ஆனந்த கூத்தாடுவோம்..</p><p>--</p><dl id="comments-block"><dt class="comment-author blogger-comment-icon" id="c1982059570842266896"><a href="profile/07421941142189934213" rel="nofollow">பொடிப்பையன்</a> </dt><dt class="comment-author blogger-comment-icon" id="c1982059570842266896">அழகுக்கு அழகு சேர்க்கிறது</dt><dt class="comment-author blogger-comment-icon" id="c1982059570842266896">நீல வானமும்,</dt><dt class="comment-author blogger-comment-icon" id="c1982059570842266896">அலையற்ற கடற்கரையும்...</dt></dl>--<br /><br /><dl id="comments-block"><dt class="comment-author blogger-comment-icon" id="c6566312915802546035"><a href="profile/07916943125962333065" rel="nofollow">கிர்பால்</a></dt><dd class="comment-body"> <p>வானம் கொண்ட நீலம் உண்டு<br />கடல்கள் உமிழ்கின்றன நிறங்கள் என்று<br />இராமன் அன்று சொன்னான்!<br /><br />என்றும்<br />வானம் கொள்ளும் வண்ணங்கள் யாவும்<br />சில சின்னக் கைகளின் மந்திரக் கட்டளையாலோ?!<br /><br />சின்னக் கால்களின் சிறு துள்ளல்கள் கண்டு<br />மேகக் கூட்டங்களும் கன்னம் சிவப்பதும் உண்டோ?!</p> </dd></dl>Sanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8330519507592560230.post-12455325728853800102009-05-28T09:30:00.000+05:302009-05-28T09:30:07.809+05:30படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 3<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaPlDD3S4WjbITU9YLtICHN8-3rkKZtiGosU6BnFNefvetP_QiY6wCWe_yrKsd-PNxwMZMWVOoXNQrB5R_kAWDitWrzBwe27n2dP5QL09MJvED5HTLvSVrnDlIMwsaZlNUoMDzmdxF79k/s1600-h/3.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 260px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaPlDD3S4WjbITU9YLtICHN8-3rkKZtiGosU6BnFNefvetP_QiY6wCWe_yrKsd-PNxwMZMWVOoXNQrB5R_kAWDitWrzBwe27n2dP5QL09MJvED5HTLvSVrnDlIMwsaZlNUoMDzmdxF79k/s320/3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5340476815295766162" border="0" /></a><br /><span dir="ltr"><br /><a href="http://www.blogger.com/profile/05033197088121557136" rel="nofollow" onclick="">Raju</a></span><br /><p>காதல் சண்டே<br /><br />உன்னிடம் சண்டைபோடும் நாளா சண்டே?<br />காதல் மொழி பேசும் நாளா சண்டே?<br /><br />இன்டர்நெட், சாட் என்று கும்மி அடித்தோம்<br />ஹோட்டல், பப் என்று சுற்றினோம்<br /><br />மல்டிப்ளெக்ஸ் அனைத்தும் பார்த்துவிட்டோம்<br />மால்கள் அனைத்தும் அளந்துவிட்டோம்<br /><br />அடல்ட்ஸ் என்ன குழந்தை என மொழி பேசி<br />காதல நினைவுகள் பருகினோம்<br /><br />வேலை காரணம் நாம் பிரிந்தாலும்<br />ஊர் மாறினாலும் மறக்கமாட்டேன் என்றாய்<br /><br />இருந்தாலும் என்னை மறந்துவிட்டாயா தோழி<br />சண்டே எனக்கு பிறந்த நாள்!</p><p>--</p><p><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/04820573964771790810" rel="nofollow" onclick="">SUREஷ்</a></span><br /></p><p>சண்டேன்னா<br /><br />இப்படித்தான்..,<br /><br />சிவப்பு மெத்தையில்...</p><p>--</p><p><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/17543463101351332439" rel="nofollow" onclick="">இயற்கை</a></span></p><p>ஹை....நாளைக்கு சண்டே ஜாலிடே..<br />என்ஜாய் எனச் சொல்லும்<br />மேட்டிக்குடி மகன் உனக்குத் தெரியுமா<br />என் சண்டேக்களின் முக்கியத்துவம்<br />பசி போக்கும்,<br />ஒரு வேளை சத்துணவும் கிடைக்ககாத நாள்<br />யூனிபார்ம் ஆடையின் கிழிசல்களுக்கு<br />ஒட்டுப் போடும் நாள்<br />அடுத்த மாதப் பரிட்சைக்குள் பேனா வாங்க,<br />சம்பாதிக்கும் நாள்..</p><p>--</p><p> <span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/02510985865918613476" rel="nofollow" onclick="">sakthi</a></span></p><p>ஞாயிறுகளில் ஆரம்பிக்கப்படும்<br />நட்பு எனும் பெயரில்<br />திங்களில் திரிந்து<br />செவ்வாயில் கனிந்து<br />புதனன்று காதல் சொல்லப்பட்டு<br />வியாழனன்று மோகம் வென்றுவிட<br />வெள்ளியன்று ஊடல் கொண்டு<br />சனியோடு தொலைந்து போகின்றது<br /><br />இப்பொழுது<br />காதல் எனும்<br />பெயரில் உதிக்கும்<br />இனக்கவர்ச்சி<br />இளையவர்களிடம்</p><p>--</p><p><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/06782106638343898742" rel="nofollow" onclick="">திகழ்மிளிர்</a></span><br /></p><p>கதம்ப மாலை ஆகிறது<br />ஞாயிறு காலை<br />கணவன்<br />தாரம்<br />மற்றும்<br />பசங்கள் சேர்ந்தயுடன்.<br /><br />.........................<br /><br />உண்ணும்<br />உறங்கும்<br />விடுதிகளாய் இல்லங்கள்<br />வார நாட்களில் ...................<br />ஞாயிறு வந்துவிட்டால்<br />வீடுகளில் எல்லாம்<br />விழாக்கோலம்<br />குடும்பத்தின<br />குதூகலத்தில்.......................</p><p>--</p><p><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/10781734641757982113" rel="nofollow" onclick="">சுழியன்</a></span><br /></p><p>இன்று உனக்காக நானடி!"<br />-----------------------------<br /><br />நெற்றியில் முத்தமிட்டு, சூடான காஃபி...<br /><br />ஆர்டின் வடிவத்தில் சுட்டுக் கொடுத்த தோசை...<br /><br />இருவரும் சேர்ந்து துவைத்த சேலை...<br /><br />கேட்டுக் கேட்டு, ஆர்வமாய் செய்த அரைகுறை சமையல்...<br /><br />தோளில் சாய்ந்து ரசித்துப் பார்த்த ஐஸ்க்ரீம் சினிமா...<br /><br />...............<br /><br />எல்லா ஞாயிறும் தவறாமல், எப்படித்தான் ,<br /><br />மேன்ஷன் அறைக்குள் நுழைகிறதோ<br /><br />தடை செய்யப்பட்ட இந்த கனவு மட்டும்</p><p>--</p><p><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/02715174879103713088" rel="nofollow" onclick="">அமுதா</a></span><br /></p><p>சிலிர்க்கின்றது இதயம்<br />காதல் பூக்கள் மின்ன<br />ஞாயிறு உதயம்..</p>Sanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8330519507592560230.post-66189020024361645262009-05-21T09:00:00.002+05:302009-05-21T12:19:05.092+05:30பேசும் கவிதைகள் - 2<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih6dasfnPDK9wY0kJaJsR796bq6DSkoRqB7SUYoThNGoQWf9ZjBKxSFIpogeTkM3_AOQ67uCaL4y5CRRNqJ-CmPcoGyKVG2AXjmXiEBev9BbmL-2tIuSbmalFeVmhvjDjAZCwB3MagA_U/s1600-h/2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih6dasfnPDK9wY0kJaJsR796bq6DSkoRqB7SUYoThNGoQWf9ZjBKxSFIpogeTkM3_AOQ67uCaL4y5CRRNqJ-CmPcoGyKVG2AXjmXiEBev9BbmL-2tIuSbmalFeVmhvjDjAZCwB3MagA_U/s320/2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5337763976874585074" border="0" /></a><br /><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/05033197088121557136" rel="nofollow" onclick="">Raju</a></span><br /><p>வாக்குறுதிகள் நிறைவேறுமா ?<br /><br />அவீங்க வந்துட்டு போனாங்க<br />வாக்குறுதி எல்லாம் கொடுத்தாங்க<br />இன்னும் அடுத்த தேர்தல் வரும் வரைக்கும்<br />நாம் காத்திருக்கணுமா?</p>--<br /><br /><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/15102411573525502887" rel="nofollow" onclick="">கோவி.கண்ணன்</a></span><br /><br />ஆடுமாடுகளுடன் ஓய்வெடுக்கும்<br />பழைய செருப்பு !<br /><br />--<br /><br /><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/08504143161102425634" rel="nofollow" onclick="">அதிஷா</a></span><br /><p>எலவச மின்சாரம் மின்னும்<br />வீடு வந்து சேரல<br /><br />வட்டியில்லா க்கடனும்<br />காடு வந்து போகல<br /><br />ஓயாம உழச்சாலும் காசு வீடு வந்து சேரல<br /><br />கையெல்லாம் காய்ச்சாலும் கஞ்சி காச்ச முடியல<br /><br />விவசாயம் பண்ணி பொழைச்ச<br />மக்க!<br /><br />வயித்து பசியில காஞ்சு<br />கிடக்க!<br /><br />வந்துட்டானுங்க ஆட்டிட்டு<br />த்தூ<br /><br />ஓட்டு மட்டும் கேட்டுகிட்டு<br /><br />யாருக்காக காத்திருக்கேன்<br /><br />பாதையத்தான் பாத்திருக்கேன்<br /><br />உலகத்துக்கே விடிஞ்சாலும்<br /><br />சூரியன்தான் உதிச்சாலும்<br /><br />எலை தழைங்க துளிச்சாலும்<br /><br />என்சோட்டு சாதி சனம்<br /><br />வாழ்க்க மட்டும் விடியலியே</p>--<br /><br /><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/05385609110792954262" rel="nofollow" onclick="">குசும்பன்</a></span><br /><p>நல்ல மாட்டுக்கு ஒரு<br />சூடுன்னான் பெரியவன்<br />இந்த மாடு இனி உதவாதுன்னான்<br />சின்னவன்!<br />இனி வாழ்கை இந்த மாட்டோடு!</p>--<br /><br /><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/04870728698510719473" rel="nofollow" onclick="">Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ</a></span><br /><br />மகன் ,<br />டாக்டர்<br />சென்னையில்...<br />பேரன் ,<br />சாப்ட்வேர் இஞ்சினியர்<br />டெக்சாசில்...<br />நான்,<br />இன்னும்<br />கிராமத்திலேயே...<br />சல்லிவேர்கள்<br />தள்ளிப் போனாலும்<br />அங்கேயே இருக்கும்<br />ஆணிவேர்ப் போல...<br />விழுதுகள்<br />விலகிச் சென்றாலும்<br />விலகாத<br />ஆலமரத்து அடிமரம் போல...<br /><br />--<br /><br /><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/10383228576687520616" rel="nofollow" onclick="">கார்க்கி</a></span><br /><p>கவிதை..<br /><br />பொருளாதார மேதைகளால்<br />பந்தாடப்பட்ட<br />பரங்கிப்பேட்டை<br />பச்சமுத்து<br />பதறினார்..<br /><br />என்னது? மீண்டும் காங்கிரஸ் ஆட்சியா?</p>--<br /><br /><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/06508344977758625522" rel="nofollow" onclick="">மங்களூர் சிவா</a></span><br /><p>திரும்பவும்<br />காங்கிரஸ் ஆட்சியா<br />மிஞ்சுமா<br />கோவணம்?</p><p>--</p><p><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/02510985865918613476" rel="nofollow" onclick="">sakthi</a></span><br /></p><p>எனை விட்டு எங்கு சென்றாய் என்னவளே<br />என் உள்ளத்து உணர்வுகளை கொன்றவளே<br /><br />ஊர் முழுவதும் அந்நியாமாகிவிட<br />உன் நினைவுகள் மட்டுமே துணையாய்<br /><br />என் எளிய தோற்றம் கண்டு<br />எள்ளி நகையாடும் கூட்டம் அறியுமா???<br /><br />உண்மையான வாழ்வின் அர்த்தம்<br />ஊதாரித்தனங்களால் வாழ்வின்<br />உண்மையை தொலைத்த கூட்டம் எனை பரிகசிக்க<br /><br />ஒங்கி நிற்கும் இந்த மரமும்<br />ஒற்றை மாடுமே எனக்கு இப்போது ஆறுதலாய்....</p>--<br /><br /><img src="https://www.blogger.com/img/blank.gif" class="comment-icon blogger-comment" alt="Blogger" /> <span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/05902899452885306609" rel="nofollow" onclick="">மின்னல்</a></span><br /><br />காலணி போல் நானும்<br />======================<br />உன் நிழிலிலாவது என்னை<br />விட்டு இருக்கலாமே<br /><br />இது கண்டிப்பா உரைநடை தான். கவிதைன்னு நினைச்சி படிக்க வேண்டாம். அந்த பெரியவரின் காலணி பேசுவது போல்....<br /><br />என் வாழ்கை<br />=================<br />கண்களில் கவலையும்<br />நாளையேனும் விடியுமா கனவும்<br />காலணி கூட பாரமாக.<br /><br />--<br /><br /><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/06782106638343898742" rel="nofollow" onclick="">திகழ்மிளிர்</a></span><br /><p>.........................<br /><br />உறவு இருந்தும் துறவு ...<br /><br />...........................<br /><br />மாடு இருக்கிறது<br />உழவனாய் உழுது கிடக்க...<br />வீடு இருக்கிறது<br />கிழவன் நான் இருக்க...<br /><br /><br />இத்தனையும் இருந்து என்ன ?<br />எத்தனை நாள் நான் இருப்பேன் ?<br /><br />இங்கே மாடும் வீடும்<br />என் சொந்தங்களாய் ...<br />எங்கே போயின<br />என் பந்தங்கள் எல்லாம் ...<br /><br />மண்ணை நேசித்தது<br />மாபெரும் குற்றமா ?<br />எனை விடுத்து<br />எங்கே சென்றாய் என் மகனே ...<br /><br />தினமும்<br />வேர்வையில் குளித்து,<br />பார்வை பூத்து,<br />வாசலில் தவமிருகின்றேன். மகனே<br />வருவாய் நீ என !<br /><br />பயிரை அறுவடை செய்த எனக்கு<br />உயிரை அறுவடை செய்யும்<br />கலை தெரியாததால்,<br />கண்ணீரில் கரைகின்றேன் ...<br />உறவு இருந்தும்<br />துறவு தான் முதுமையிலே<br />என உணர்கின்றேன்.</p>--<br /><br /><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/07916943125962333065" rel="nofollow" onclick="">Kirpal A V</a></span> said...<p>மின்ன<br />என் அண்ணன் தம்பிகளோட<br />கருவேலங்காட்டுக்குள்ள<br />'ஒரு கட்டுச் சுள்ளியில<br />ஒரு சுள்ளி கோண சுள்ளி,<br />ஒரு கட்டுச் சுள்ளியில...' ன்னு<br />சொல்லிக்கிட்டே சுள்ளி பொறுக்கயில<br />சத்தமில்லாம மேலேறி<br />உச்சியத் தொட்டுருவார் சூரியனார்.<br /><br />வெயில் படாம நிழல்ல நின்னு நின்னு<br />ஓடுறவன் பயந்தாங்கொள்ளி!<br />வெயில்கால் புழுதிபட ஓடிப்போய்<br />ரெட்டமாட்டுக் கட்டவண்டி தொத்துரவன் வலுத்தவன்!<br /><br />ரெட்டமாட்டு வண்டி தொத்தி<br />பொறுக்கி வந்த சுள்ளிக<br />கல்லுக்கூட்டுக்குள்ள சடசடக்க,<br />பொங்கச்சோறு பானையில<br />பொங்க நிக்க,<br />கட்டவண்டியோட கட்டிவச்ச ஆட்டுக்கிடா<br />மே... மே... ங்க<br />முறுக்கு மீசக்கி நடுவுல<br />புன்னகையா பூரிச்சு நிப்பான் கருப்பராயன்.<br /><br />இன்னக்கி<br />கேஸ் அடுப்புல கறி வேகுதாம்!<br />பேரம் பேத்திக வீடியா கேம் ஆடுதாம்!<br />இன்னமும்<br />பூரிச்சுப் புன்னகையாத்தான் நிக்கறான் கருப்பராயன்!</p><p>--</p><p><span dir="ltr"><a href="http://www.blogger.com/profile/07693734102433524240" rel="nofollow" onclick="">Gowripriya</a></span><br /></p><p>புன்புலம் தினமுழுது<br />புடைத்திருக்கும் உன்<br />புறங்கைச் சிரைகளுக்குள்<br />புகுந்து பார்த்தோ..<br /><br />பொசுக்கும் வெயில் மறுக்க..<br />புன்னகையின் நரை மறைக்க..<br />கார்முகில் காணாத<br />காற்றின் பசலை மொழி<br />காது தீண்டாதிருக்க..<br />நீயணிந்த பாகைக்குள்<br />நுழைந்து நோக்கியோ...<br /><br /><br />பாடுபொருள் தேடத்<br />தேவையிருக்கவில்லை என்<br />கவிதைக்கு..<br />மருதம் பிறழ்ந்து பாலையாதலின்<br />மாபெரும் வேதனையுன்<br />விழிமுனையில் மொழியற்று<br />வீற்றிருக்கையில்..</p>Sanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8330519507592560230.post-48649068273819257892009-05-19T17:22:00.003+05:302009-05-19T17:25:56.719+05:30கவிதை விமர்சனம் - ஜ்யோவரம் சுந்தர்<div><div style="text-align: center;"><span style="font-weight: bold;"><u><a style="color: rgb(255, 0, 0);" href="http://pesumkavithai.blogspot.com/2009/05/1.html">முதல் போட்டியில்</a> வந்த கவிதைகளுக்கு திரு.ஜ்யோவரம் சுந்தரின் விமர்சனம்.</u></span><br /></div><br />அந்தப் பதிவில் ரவிஷங்கரின் கவிதையும், முத்துக்குமரனின் கவிதையும் மட்டுமே எனக்குப் பிடித்திருக்கின்றன (மண் மீது கரையும் மழைக் கனவுகள் - என்ன அருமையான படிமம்!).<br /><br /></div> <div> </div> தமிழன் - கறுப்பி, கும்க்கியின் சில வரிகள் பளிச்சிடுகின்றன. மற்றபடி கவிதைகளாக ஆகவில்லை. அஷோக் சொல்ல வருவது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தரையைத் தறை எனக் கவிதையில் எழுதினால் எரிச்சல்தான் வருகிறது :(Sanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8330519507592560230.post-49052283454093363562009-05-14T10:02:00.027+05:302009-05-20T10:55:41.849+05:30பேசும் கவிதைகள் - 1<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjcY5TRWy6WPsJoxP66HJNQT_ANpzodgJOTUvo6GBUIISqC9zKR7DkGEPOtITmMoRB9Q16E_JRu-gUmyR5syknlf5GgmuFG31DdNmYnt4RrjQEj02H2AuE2qg3P0PkCO0HrFlaolTE3s8/s1600-h/1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5332935579601519394" style="margin: 0px auto 10px; display: block; width: 320px; cursor: pointer; height: 224px; text-align: center;" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjcY5TRWy6WPsJoxP66HJNQT_ANpzodgJOTUvo6GBUIISqC9zKR7DkGEPOtITmMoRB9Q16E_JRu-gUmyR5syknlf5GgmuFG31DdNmYnt4RrjQEj02H2AuE2qg3P0PkCO0HrFlaolTE3s8/s320/1.jpg" border="0" /></a><br /><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/11574164426232539736" rel="nofollow">ஸ்ரீமதி</a></span><br /><br /><p>தலைப்புகளோடு மட்டுமே<br />முற்றுபெறும் கவிதைகள்...<br />ஆழ்ந்த யோசனைகளினூடே<br />அதிக இனிப்புடன் தேநீர்....<br />வாசனை வரங்களை<br />பன்னீருக்கு பரிசளித்த பூக்கள்.....<br />காதுகளை கடன்கொடுக்க<br />காற்றில் கரையும் கானம்...<br />கதகதப்பாய் குளிர்காய<br />கணங்கள் நீட்டும் அவன் நினைவுகள்....<br />ஜன்னலோரத்தில் நான்....<br />மழைக்கம்பிகளின் குத்தலிலிருந்து<br />விடுபட வழி தேடி ஜோடிப்புறாக்கள்....<br />எல்லோருக்குமாய்<br />எதற்கு பெய்ய வேண்டும் மழை?</p>--<br /><br /><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/00696127334770457877" rel="nofollow">லோகு</a></span><br /><br /><p>உன்னை பிரிந்து விட்ட துக்கத்தில்<br />வானத்து தேவதைகள் எல்லாம்<br />கண்ணீர் விட்டு அழுகின்றன..<br />உன் பிறந்தநாள் தோறும் மழை..</p>--<br /><br /><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/08125690479454313461" rel="nofollow">ஜோதிபாரதி</a></span><br /><br /><p>விட்டு விட்டது மழை<br />விடவில்லை தூவானம்<br />நாற்றமடிக்கிறது<br />கிடை தண்ணீர்<br />எப்பொழுது வ(வி)டியும்</p>--<br /><br /><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/12946455739349099519" rel="nofollow">தமிழ் பிரியன்</a></span><br /><br />என் நினைவுகளைப் போலவே<br />கலங்கலாக இருக்கும்<br />புது மழையின் தூறல்களே!<br />உங்களுக்குத் தெரியுமா?<br />நானும் ஒருநாள் உங்களைப்<br />தெளிவாகவே வந்திறங்கி<br />இப்பூமியில் இருந்தேன்.<br /><br />--<br /><br /><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/03609115579935311457" rel="nofollow">Thamizhmaangani</a></span><br /><br />உனக்காக<br />காத்திருக்கும்பொழுது<br />மழைத்துளிகளை ரசிக்கிறேன்<br />உன் கன்னக்குழிகளின்<br />ஞாபகம் வருவதால்<br /><br />--<br /><br /><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/15306331345690220988" rel="nofollow">நான் ஆதவன்</a></span><br /><br /><p>என் வீட்டு வாசலில் பார்த்தபோது<br />எனக்கு வந்தது ஆத்திரம்<br />எவனோ பெய்த -த்திரத்திற்கு....</p>--<br /><br /><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/17223247752706817977" rel="nofollow">G3</a></span><br /><br />காதலியை<br />காண வரும் காதலனாய்<br />உனக்கு முன் பூமிக்குவந்த<br />நீர்த்துளிகளை தேடி<br />ஆனந்தமாய் கலக்கிறாய் !!<br /><br />மேகத்துடன் சண்டையிட்டு<br />வெளிநடப்பு செய்கின்றன<br />மழைத்துளிகள் !!!<br /><br />--<br /><br /><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/05902899452885306609" rel="nofollow">மின்னல்</a></span><br /><br />1.<br />துளியென விழுந்தாய்<br />நீரலையாய் நகழ்ந்தேன்.<br /><br />2.<br />என் அமைதியை<br />துளித்துளியாய் சிதைக்கின்றாய்<br />துவானமாய் நீ விழுந்து<br /><br />3.<br />தூரல் புள்ளிகள் சுற்றி<br />வட்ட வட்ட கோலங்கள்<br /><br />--<br /><br /><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/17303605939807141039" rel="nofollow">கே.ரவிஷங்கர்</a></span><br /><br /><p><span style="font-weight: bold;">தலைப்பு: கல்லெறிந்தவர்கள்</span><br /><br />6வது வகுப்பில் கெளசல்யா<br />8வது வகுப்பில் ராதா<br />பிளஸ் ஒன்னில் கேத்தரின்<br />கல்லூரி முதல் வருடத்தில் ரம்யா<br />மூன்றாவது வருடத்தில் ஜானவி<br />முடிக்கும் போது (டெல்லி) ஷ்ருதி<br />இந்த மொசைக் குளத்தில்<br />கல்லெறிந்து விட்டுப்<br />போனவர்களின்<br />நினைவுகள் கலையாமல்<br />சங்கு சக்கரமாக<br />அங்கங்கே சுற்றிக்கொண்டிருக்கிறது<br />கடைசியாக கல்லெறிந்து<br />கல்யாணம் ஆகிக்<br />கலைந்துப் போன<br />என் மனைவியின்<br />பெரிய சக்கரத்தைச்<br />சுற்றி</p><br /><p>--</p><br /><p><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/05385609110792954262" rel="nofollow">குசும்பன்</a></span><br /></p><br /><p>இராவுல முட்ட முட்ட<br />குடித்த பீரு<br />ஓடுது ஆறா<br />ரோட்டுல!</p><br /><p>--</p><br /><p><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/01930681705218475159" rel="nofollow">Subha</a></span><br /></p><br /><p>இறைவா..<br />எங்கள் கண்ணீரை உன்<br />அபிஷேகத்துக்குக் காணிக்கையாக்குகிறோம்..<br />மனம் இறங்கி எம் குல<br />மக்களின் அல்லலைத்<br />துடைக்க வா<br />சீக்கிரம்..<br />கண்ணீர்த்துளி சேகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது..<br />அது வெள்ளமாகி எங்களைக்<br />கொல்லுமுன் வந்துவிடு!</p><br /><p>--</p><br /><p><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/02510985865918613476" rel="nofollow">sakthi</a></span><br /></p><br /><p>உன் அன்பு மழையில்<br />நனைய வந்தால்<br />நீயோ வசவு மழையில்<br />வருத்தப்படுத்துவாய்<br /><br />அப்போதும்<br />தூவானத்தின் தூரல்களும்<br />சில்லென்ற சாரல்களும்<br />சுடும் நீ இல்லாத போழ்துகளில்</p><br /><p>--</p><br /><p><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/09746136247218188169" rel="nofollow">அன்புடன் அருணா</a></span><br /></p><br /><p>அடுத்த துளிக்காகக்<br />காத்திருக்கும்<br />குட்டிக் குட்டி<br />வட்டக் கிண்ணங்கள்!!!<br /><br />வானம் முகம்<br />பார்த்துக் கொள்ள<br />விடாமல் இதென்ன?<br />மழைத் துளிகள்<br />முந்திக் கொண்டன!!!<br /><br />வட்டத்துக்குள் வட்டம்<br />நீருக்குள் மழைத்துளி<br />இதென்ன???<br />பூமிக்குள் வானமா???</p><br /><p>--</p><br /><p><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/06455464170305118076" rel="nofollow">சூர்யா ௧ண்ணன்</a></span><br /></p><br /><p>திடீரென பெய்த மழையென<br />நீ வந்தாய்! இன்று<br />எஞ்சிய மண் வாசனை<br />நெஞ்செல்லாம்..,</p><br /><p>--</p><br /><p><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/01494000664784326130" rel="nofollow">Monks</a></span><br /></p><br /><p>இதுவரை விழுந்த<br />மொக்கைகளுக்குப் பின்<br />இன்றைய கவிதைத்துளிகளாய்<br />நீர்</p><br /><p>--</p><br /><p><span dir="ltr"><a onclick="" href="http://vaasal.wordpress.com/" rel="nofollow">vaasal</a></span><br /></p><br /><p>இந்த ஓர் மழைத்துளியைப் போன்றது தான் உன் பார்வையும்<br />என் மனக் கூட்டில் உள்ள<br />பட்டாம் பூச்சிக் கூட்டத்தில் கலந்து சிறகடிக்கிறது !</p><br /><p>--</p><br /><p><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/01704359568633459507" rel="nofollow">லவ்டேல் மேடி</a></span><br /></p><br /><p>ஒரு துளி மலையில்<br />உருவாகிறது பல வளையங்கள்<br />- இது அண்ணன் தங்கை போல<br />ஒன்றுடன் ஒன்று கலக்காத அன்பு.<br /><br />ஆனால் இவ்வளையங்கள்<br />மற்ற துளியில் வரும் வளையங்களுடன்<br />ஒன்றோடு ஒன்று கலக்கும்<br />- இது உறவுக் காதல்.</p><br /><p>--</p><br /><p><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/13942977619754014724" rel="nofollow">Maddy</a></span><br /></p><br /><p>என் மனக்குளத்தில்<br />பட்டு தெறித்து<br />விநாடி பொழிதில்<br />வீரியம் குறைந்தன<br />வீணாக வந்த<br />வளைய கவலைகள்!!!</p><br /><p>--</p><br /><p><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/12274631919631514508" rel="nofollow">முத்துகுமரன்</a></span><br /></p><br /><p>மண் மீது<br />கரையும்<br />மழைக் கனவுகள்</p><br /><p>--</p><br /><p><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/06508344977758625522" rel="nofollow">மங்களூர் சிவா</a></span><br /></p><br /><p>கண்ணிலிருந்து<br />பெரும் மழை<br />புது மனைவி வைக்கும்<br />சாம்பார்</p><br /><p>--</p><br /><p><span dir="ltr"><a onclick="" href="http://www.blogger.com/profile/03718525789097542849" rel="nofollow">D.R.Ashok</a></span><br /></p><br /><p>தறை நனைத்து<br />எந்த அழகி போட்ட<br />ஆறு புள்ளி கோலமிது</p><br /><p>--</p><br /><p><a onclick="" href="http://www.blogger.com/profile/07277995378564378595" rel="nofollow">மதிபாலா</a> </p><p>எப்போதும் ஓயாத அலைகள் </p><p>இப்போது ஓய்ந்து போயின.</p><p>சீக்கிரம் உன் முகத்தைக் காட்டிவிடு.</p><p>சீரியஸ்ஸான சத்யாகிரகமாம் இது.!</p><p>***</p><p>மழைத்துளி கிளப்பிய அலைகள் </p><p>மனதுக்குள் மெல்லிய தென்றல்.</p><p>கடற்கரையில் மட்டும் தானா காற்று? </p><p>--</p><p></p><p><a onclick="" href="http://www.blogger.com/profile/14877895016900477893" rel="nofollow">கும்க்கி</a></p><p>ஒரு துளியின் அழைப்பில்<br />விட்டு விடுதலை ஆகின்றோம்<br />நாம்<br /><br />எல்லா கசடுகளிடனிருந்தும்<br />அப்போதைக்கு விடுதலை!<br /><br />சூழ்நிலையின் போக்கு குறித்த,<br />எந்தவொரு சலனங்களுமில்லை மனதில்..<br /><br />வாழ்வும் அதன் போக்குகளும் குறித்தான<br />கவலையற்று இருக்கின்றோம்<br />சில மணித்துளிகளேனும்..<br /><br />மழையும் நனைவதுவும்<br />ஈடுபார்க்கவியலாது இன்னபிற<br />அனுபவங்களுடன்..<br /><br />செடிகளும் கொடிகளும் மரங்களும்<br />இன்னபிற ஜீவராசிகளும்<br />உணர்ந்த அளவிற்க்கேனும்<br />மழை உணர்ந்த மனிதருண்டோ<br /><br />எந்த ப்ரதி பலனுமின்றி<br />எல்லா உயிரையும் உய்விக்க வந்த<br />மழை குறித்த<br />செய் நன்றி இல்லை இங்கு யார்க்கும்<br /><br />சேமிக்க இருந்த இடமும்<br />சுருங்கி வருகிறதிப்போது<br /><br />காலத்தின் நாம் காலங்கடந்து<br />போயிருப்பினும்<br />இயற்கையின் கருணையின்றி<br />வாழ்க்கையில்லை<br />என உணர்வதெப்போது... </p><p>--</p><p><a onclick="" href="http://www.blogger.com/profile/15402030324307762879" rel="nofollow">நட்புடன் ஜமால்</a> </p><p>என்னை பற்றிய </p><p>உன் நினைவலைகள் </p><p>உன்னை பற்றிய </p><p>என் கனவலைகள் </p><p>இன்னும்</p><p>கலங்கலாய்...</p><p>--</p><p><a onclick="" href="http://www.blogger.com/profile/15102411573525502887" rel="nofollow">கோவி.கண்ணன்</a></p><p>துளி முத்தங்கள்,</p><p>அத்தனையும் வெட்கங்களாக விரிகிறது!</p><br /><p>--</p><br /><p><a onclick="" href="http://www.blogger.com/profile/05370636616143609017" rel="nofollow">பூர்ணிமா சரவணக்குமார்</a> </p><p>மழை ஓய்ந்த பின்</p><p>முற்றத்து வீட்டின்</p><p>ஓடுகள் தவற விடும்</p><p>மழைத் திவலைகளை</p><p>கைகளில் பிடித்து</p><p>விளையாடுகையில்,</p><p>பிடறியில் விழும் அடி</p><p>ஒரு நாளும் வலித்ததில்லை!</p><p>ஆ.......வென்று துடிக்கும்</p><p>என் நாடகத்தை </p><p>அம்மா....</p><p>நிஜமென்று தான் </p><p>நினைத்திருக்கிறாள்!!</p><p>இன்றும் அதேபோல் விளையாடுகையில்,</p><p>விழாத அடியின் </p><p>வலி தாங்காமல்</p><p>தடவிப் பார்த்து </p><p>அலறுகையில் அலைந்து</p><p>அரற்றுகிறது கண்கள்!!!</p><p>--</p><p><a onclick="" href="http://www.blogger.com/profile/17543463101351332439" rel="nofollow">இயற்கை</a> </p><p>தொடுவானில் இணைந்திருந்த</p><p> மேகக் காதலனின் பிரிவால் உண்டான பூமி மகளின் </p><p>முகச்சுருக்கம்</p>--<br /><br /><a onclick="" href="http://www.blogger.com/profile/16139443799712632451" rel="nofollow">சென்ஷி</a><br /><br />ஒரு பூ கிடைத்திருக்கலாம்<br />மறுப்பின்<br />கிளை விட்டிருக்கலாம்<br />மனம் தொட்டு அதிரவைத்து<br />விலகி ஓடும்<br />வரம்புகளுக்குள்<br />மழைத்துளி பட்டு<br />நீர்த்து கலையாமல் அலைகிறது<br />கோல முத்திரைகள்<br /><br />--<br /><br />எல்லைகள் தொடுமென்றோ<br />திரும்பி வருமென்றோ<br />எதிர்பார்ப்புகளற்ற சலனத்தில்<br />தொலையும் அலைகள்<br />போன்றதே காதலும்!<br />--<br />நேற்று கரடியாகவும்<br />இன்று முயலாகாவும்<br />நாளை வேறு ஏதாகவும்<br />குழந்தைக்கு காட்சி தரும்<br />புகைப்படத்தில்.<br />ஒரே கவலை<br />அலையும் நீரில்<br />கப்பல் விட முடியாதது<br />மட்டுமே!<br />--<br />மெலிதாய்<br />இதழ் விரிக்கத்தொடங்கி<br />சப்த சிரிப்புகளில்<br />சுத்தமாய் மறைந்திருந்தது<br />குவளைப்பூ போன்றதொரு<br />மழையின் துளியும்<br />--<br />எத்தனை உயரத்திலிருந்து<br />விழுந்தாலும்<br />குழந்தையை சிரிக்க வைத்த பின்பே<br />மறைகிறது<br />தூறல் பொம்மைகள்<br />--<br />அடிவானம் தொட்டுவிட்ட<br />ஆசையில் அலைகிறது<br />மேகங்கள்<br />நீரலையாய்<br />--<br />உன் விழிகளிலிருந்து<br />இடம் தவறி<br />அலைகின்ற கண்ணீர்ப்பூக்கள்<br />தொட்ட வடிவமானதா<br />எப்படி சூட்டுவது<br />--<br />உனக்காக பெய்த மழையை<br />சேகரித்தும்<br />அதற்காக கவிதைகள் எழுதியும்<br />விடிகிறது பொழுது<br />அலையின் வடிவங்கள்<br />மனங்கள்தோறும்<br />--<br />குறிப்பார்த்து விழுந்த கல்லாக<br />நீர்த்துளி பட்டு<br />சிதறிய தண்ணீர்<br />நீ துளி பார்த்ததும்<br />சிதறும் நானாய்<br />--<br />பாதச்சுவடு படாமல்<br />குதிகாலை தூக்கி<br />கால் விரல்களால்<br />நடந்து போகிறாய்<br />கோலம் போட்டுக்கொண்டுவிட்டது<br />தண்ணீர்<br />--<br />ஒரு மழைக்கால இரவின்<br />ஆரம்பத்தில்<br />கொடுத்த முத்தம்<br />தீராமல்<br />தன் தடயங்களை பத்திரப்படுத்தியுள்ளது<br />நீ சென்ற பிறகும்<br />--<br />காதல் சின்னமாக<br />பத்திரப்படுத்த துடிக்கிறது<br />மனசு<br />நீ நனைந்த மழையை<br />சேகரிக்க<br />--<br />அத்தனை மழையிலும்<br />என்னை மூழ்கடித்து<br />நனையாத வெளிச்சமாய்<br />நகர்ந்து செல்கின்றது<br />என் மீதான உன் காதல்<br />--<br />மதுக்கோப்பை வடிவில்<br />காதல் பூத்திருந்தது<br />அடர் சிவப்பு வர்ணம்<br />நீர்த்திருந்ததில்<br />மிதந்து போனது<br />அவள் மழையில் நனைந்த அழகு<br />--<br />மழையுடன் உறவாடுதல்<br />எளிதாகி விட்டது<br />அரிதாகக் கிடைத்திருக்கும்<br />உன் பிரிவுக்காலத்தில்<br />--<br />தண்ணீர்ப்பூக்களில்<br />மழைத்துளி தூவும்<br />காதல் தோல்வி கோலங்கள்<br />--<br /><br /><a onclick="" href="http://www.blogger.com/profile/17757802695536287434" rel="nofollow">தமிழன்-கறுப்பி...</a><br /><br />நேற்று பெய்த மழையில் இன்னமும் நனைந்து கொண்டிருக்கிறது உயிர் சொட்டுச்சொட்டாய்<br />உன் நினைவுகள்...<br />--<br />மூன்று வருடங்களுக்கு பிறகு நினைவு படுத்தியிருக்கிறது இந்தமழை,<br />நீ பிரிவறிவித்த மழை நாளின் இரவையும் கூடவே<br />உன்னோடு கழிந்த விடு முறை நாட்களின் மழை நேரப் பின்மதியங்களையும்.<br />மழை எப்பொழுதும்<br />மழையாகவே இருக்கிறது!<br />--<br />எப்பொழுதாவது ரசிக்கக்கிடைக்கிற தாழ்வாரத் தூவானங்களில் தெறித்தலைகிறது உன் முகம்<br />யாருமற்ற பகல்களில்<br />வருகிற மழையை<br />நீயும் ரசிக்கிறாயா?<br />--<br />வாசனைகளோடு வந்து<br />ஜன்னல் நனைக்கிற சாரல்களுக்கு தெரிவதில்லை<br />நீ இப்பொழுதெல்லாம் அறைக்கு வருவதில்லை என்பதும்<br />மழைக்கும் உனக்குமான சினேகம் மறக்கப்பட்டு விட்டதையும்..<br />--<br />வாசனைகளோடு வருகிற மழைக்கு தெரிவதில்லை நீயற்ற இரவுகளின் நீளம்,<br />தனியே அருந்துகிற தேநீருக்கு தெரிவதில்லை முத்தங்களுக்கு பின்னரான தேநீரைப்பற்றி,<br />அணைத்துக்கொள்கிற உன் தலையணகைள் தூக்கம் கலைகிற இரவுகளில் கிசுகிசுப்பாய் பேசுவதில்லை,<br />நீ ஊருக்கு போன நேரத்தில் வருகிற மழைக்கு தெரியாது<br />போர்வையை சரிசெய்ய நீயில்லாத இரவுகள் பற்றி,<br />வந்து விடு அல்லது மழையை கூட்டிப்போய்விடு!<br />--<br />நனைந்து கொண்டே<br />பேசி வந்த புதன் கிழமை,<br />ஈரம் காயும்வரை இருந்துவிட்டுப்போன<br />ஞானசம்பந்தர் நூல்நிலையம்,<br />நூல் நிலையத்து விகடனில் வாசித்த மழைக்கவிதை,<br />தகரக்கூரையில் விழுகிற<br />துளிச் சப்தங்கங்கள்,<br />விடைபெறும்வரை பிரியாமலிருந்த இடது கைகளின் வெப்பம்,<br />விடைபெறும் தருணத்தில் நிகழந்த குளிர்விட்ட முத்தம்,<br /><br />இங்கே எப்பொழுதாவது வருகிற மழையும்,<br />இவ்வளவும் கொண்டு வருகிறது<br />உன் கடிதங்களை தவிர!<br /><br />--<br /><br /><dl id="comments-block"><dt class="comment-author" id="comment-6519063652494899468"><a href="profile/15099428676799548209" rel="nofollow">Nithya Subramanian</a></dt><dd class="comment-body"> <p>அதோ பாரு தண்ணி<br />அதுல குதிச்சா வரும் ஜன்னி<br />ஹே டண்டனக்கா ..<br />ஹே டண்டனக்கா ..</p> </dd></dl><p></p>Sanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.com7