^பேசும் கவிதைகள்^

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் அறிவிக்கப் படும் ^படம் பார்த்து கவிதை சொல்லும்^ போட்டியில் கிடைக்கும் அழகான கவிதைகளின் தொகுப்பு.


Raju

வாக்குறுதிகள் நிறைவேறுமா ?

அவீங்க வந்துட்டு போனாங்க
வாக்குறுதி எல்லாம் கொடுத்தாங்க
இன்னும் அடுத்த தேர்தல் வரும் வரைக்கும்
நாம் காத்திருக்கணுமா?

--

கோவி.கண்ணன்

ஆடுமாடுகளுடன் ஓய்வெடுக்கும்
பழைய செருப்பு !

--

அதிஷா

எலவச மின்சாரம் மின்னும்
வீடு வந்து சேரல

வட்டியில்லா க்கடனும்
காடு வந்து போகல

ஓயாம உழச்சாலும் காசு வீடு வந்து சேரல

கையெல்லாம் காய்ச்சாலும் கஞ்சி காச்ச முடியல

விவசாயம் பண்ணி பொழைச்ச
மக்க!

வயித்து பசியில காஞ்சு
கிடக்க!

வந்துட்டானுங்க ஆட்டிட்டு
த்தூ

ஓட்டு மட்டும் கேட்டுகிட்டு

யாருக்காக காத்திருக்கேன்

பாதையத்தான் பாத்திருக்கேன்

உலகத்துக்கே விடிஞ்சாலும்

சூரியன்தான் உதிச்சாலும்

எலை தழைங்க துளிச்சாலும்

என்சோட்டு சாதி சனம்

வாழ்க்க மட்டும் விடியலியே

--

குசும்பன்

நல்ல மாட்டுக்கு ஒரு
சூடுன்னான் பெரியவன்
இந்த மாடு இனி உதவாதுன்னான்
சின்னவன்!
இனி வாழ்கை இந்த மாட்டோடு!

--

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ

மகன் ,
டாக்டர்
சென்னையில்...
பேரன் ,
சாப்ட்வேர் இஞ்சினியர்
டெக்சாசில்...
நான்,
இன்னும்
கிராமத்திலேயே...
சல்லிவேர்கள்
தள்ளிப் போனாலும்
அங்கேயே இருக்கும்
ஆணிவேர்ப் போல...
விழுதுகள்
விலகிச் சென்றாலும்
விலகாத
ஆலமரத்து அடிமரம் போல...

--

கார்க்கி

கவிதை..

பொருளாதார மேதைகளால்
பந்தாடப்பட்ட
பரங்கிப்பேட்டை
பச்சமுத்து
பதறினார்..

என்னது? மீண்டும் காங்கிரஸ் ஆட்சியா?

--

மங்களூர் சிவா

திரும்பவும்
காங்கிரஸ் ஆட்சியா
மிஞ்சுமா
கோவணம்?

--

sakthi

எனை விட்டு எங்கு சென்றாய் என்னவளே
என் உள்ளத்து உணர்வுகளை கொன்றவளே

ஊர் முழுவதும் அந்நியாமாகிவிட
உன் நினைவுகள் மட்டுமே துணையாய்

என் எளிய தோற்றம் கண்டு
எள்ளி நகையாடும் கூட்டம் அறியுமா???

உண்மையான வாழ்வின் அர்த்தம்
ஊதாரித்தனங்களால் வாழ்வின்
உண்மையை தொலைத்த கூட்டம் எனை பரிகசிக்க‌

ஒங்கி நிற்கும் இந்த மரமும்
ஒற்றை மாடுமே எனக்கு இப்போது ஆறுதலாய்....

--

Blogger மின்னல்

காலணி போல் நானும்
======================
உன் நிழிலிலாவது என்னை
விட்டு இருக்கலாமே

இது கண்டிப்பா உரைநடை தான். கவிதைன்னு நினைச்சி படிக்க வேண்டாம். அந்த பெரியவரின் காலணி பேசுவது போல்....

என் வாழ்கை
=================
கண்களில் கவலையும்
நாளையேனும் விடியுமா கனவும்
காலணி கூட பாரமாக.

--

திகழ்மிளிர்

.........................

உறவு இருந்தும் துறவு ...

...........................

மாடு இருக்கிறது
உழவனாய் உழுது கிடக்க...
வீடு இருக்கிறது
கிழவன் நான் இருக்க...


இத்தனையும் இருந்து என்ன ?
எத்தனை நாள் நான் இருப்பேன் ?

இங்கே மாடும் வீடும்
என் சொந்தங்களாய் ...
எங்கே போயின
என் பந்தங்கள் எல்லாம் ...

மண்ணை நேசித்தது
மாபெரும் குற்றமா ?
எனை விடுத்து
எங்கே சென்றாய் என் மகனே ...

தினமும்
வேர்வையில் குளித்து,
பார்வை பூத்து,
வாசலில் தவமிருகின்றேன். மகனே
வருவாய் நீ என !

பயிரை அறுவடை செய்த எனக்கு
உயிரை அறுவடை செய்யும்
கலை தெரியாததால்,
கண்ணீரில் கரைகின்றேன் ...
உறவு இருந்தும்
துறவு தான் முதுமையிலே
என உணர்கின்றேன்.

--

Kirpal A V said...

மின்ன
என் அண்ணன் தம்பிகளோட
கருவேலங்காட்டுக்குள்ள
'ஒரு கட்டுச் சுள்ளியில
ஒரு சுள்ளி கோண சுள்ளி,
ஒரு கட்டுச் சுள்ளியில...' ன்னு
சொல்லிக்கிட்டே சுள்ளி பொறுக்கயில
சத்தமில்லாம மேலேறி
உச்சியத் தொட்டுருவார் சூரியனார்.

வெயில் படாம நிழல்ல நின்னு நின்னு
ஓடுறவன் பயந்தாங்கொள்ளி!
வெயில்கால் புழுதிபட ஓடிப்போய்
ரெட்டமாட்டுக் கட்டவண்டி தொத்துரவன் வலுத்தவன்!

ரெட்டமாட்டு வண்டி தொத்தி
பொறுக்கி வந்த சுள்ளிக
கல்லுக்கூட்டுக்குள்ள சடசடக்க,
பொங்கச்சோறு பானையில
பொங்க நிக்க,
கட்டவண்டியோட கட்டிவச்ச ஆட்டுக்கிடா
மே... மே... ங்க
முறுக்கு மீசக்கி நடுவுல
புன்னகையா பூரிச்சு நிப்பான் கருப்பராயன்.

இன்னக்கி
கேஸ் அடுப்புல கறி வேகுதாம்!
பேரம் பேத்திக வீடியா கேம் ஆடுதாம்!
இன்னமும்
பூரிச்சுப் புன்னகையாத்தான் நிக்கறான் கருப்பராயன்!

--

Gowripriya

புன்புலம் தினமுழுது
புடைத்திருக்கும் உன்
புறங்கைச் சிரைகளுக்குள்
புகுந்து பார்த்தோ..

பொசுக்கும் வெயில் மறுக்க..
புன்னகையின் நரை மறைக்க..
கார்முகில் காணாத
காற்றின் பசலை மொழி
காது தீண்டாதிருக்க..
நீயணிந்த பாகைக்குள்
நுழைந்து நோக்கியோ...


பாடுபொருள் தேடத்
தேவையிருக்கவில்லை என்
கவிதைக்கு..
மருதம் பிறழ்ந்து பாலையாதலின்
மாபெரும் வேதனையுன்
விழிமுனையில் மொழியற்று
வீற்றிருக்கையில்..

3 comments:

3 வது வரி....சிறை இல்லை.. சிரை

very good.
Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks

kovi kannan and gowripriya delivered de good!!